1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 15 ஜூன் 2020 (08:48 IST)

முன்கூட்டியே மரணத்தை சொல்லிவிட்டு சென்ற சுஷாந்த் சிங் - கவர் பிச்சரில் கசிந்தது ரகசியம்!

பிரபல பாலிவுட் நடிகரும் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தவருமான நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் திடீரென நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அவரது மரண செய்தியை தற்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியவைல்லை. அவ்வளவு அழகும், நடிப்பு திறமையும் , இளகிய மனமும் கொண்ட சுஷாந்த் சிங்கின் ஒவ்வொரு நினைவுகளும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இன்னும் இன்னும் அவரை நேசிக்கத்தான் வைக்கிறது.

கடந்த 8ஆம் தேதி சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா ஷலியன் 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார் அதுமுதலே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் அதன் பிறகே தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.


இந்நிலையில்  "சுஷாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில் வைத்துள்ள கவர் பிக்சர் ஒரு பெயிட்டிங், அந்த பெயிட்டிங் வரைந்தவர் அடுத்த ஒரு வருடத்தில் மன அழுத்தத்தால் இறந்துள்ளார். இது நடந்தது 1980" ஒருவேளை தன் இறப்பின் வெளிப்பாடாக தான் சுஷாந்த் இந்த பிச்சரை வைத்தாரோ..?  என அவரது ரசிகர்கள் எண்ணி மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.