1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (16:01 IST)

மீண்டும் சுறுசுறுப்பாகும் பா ரஞ்சித்… சூர்யாவுக்கு கதை ரெடி!

இயக்குனர் பா ரஞ்சித் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

பா ரஞ்சித் மெட்ராஸ் படத்தை இயக்கி முடித்த பின்னர் அடுத்ததாக சூர்யாவை வைத்துதான் இயக்குவதாக இருந்தது. அந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பதாக பேச்சுவார்த்தை நடந்தது. அதற்குள் ரஞ்சித்துக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்புக் கிடைத்த நிலையில் அந்த கூட்டணி அப்போது தள்ளிப் போனது. அதன் பின்னரும் வரிசையாக இருவரும் வேறு வேறு படங்களில் கவனம் செலுத்தியதால் அந்த படம் அமையவே இல்லை.

இந்நிலையில் இப்போது ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தை முடித்த பின்னர் சூர்யாவோடு இணைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. இப்போது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து பா ரஞ்சித் ஒரு கதையை உருவாக்கி சூர்யாவுக்கு சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.