1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 ஜூலை 2021 (16:00 IST)

குறும்படத்தின் மூலம் மீண்டும் இணைந்த நட்பு… விரைவில் பட அறிவிப்பு!

நடிகர் சூர்யாவும் இயக்குனர் கௌதம் மேனனும் நவரசா ஆந்தாலஜியில் ஒரு குறும்படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர்.

சூர்யாவுக்கு தமிழ் சினிமாவில் முதல் வெற்றிப்படம் என்றால் அது காக்க காக்கதான். அதன் பின்னர் அவருக்கு பெரும்புகழைத் தேடித்தந்த வாரணம் ஆயிரம் படத்தைக் கொடுத்ததும் கௌதம் மேனன்தான். ஆனால் இருவரும் இணைய துருவநட்சத்திரம் படத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

அதன் பின்னர் இப்போது நவரசா ஆந்தாலஜியில் இணைந்த இருவரின் நட்பும் மறுபடியும் துளிர்விட்டது. இதையடுத்து இப்போது இருவரும் முழுநீளப் படத்தில் இணைய உள்ளனராம். இருவரும் இது சம்மந்தமாக பேசி விரைவில் அறிவிப்பு வெளியாகும்.