1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (19:57 IST)

சுசீந்தரன் படத்தில் நடிக்க வேண்டுமா… அப்போ இதை செய்யுங்கள் – சிம்புவுக்கு செக் வைத்த மாநாடு தயாரிப்பாளர்!

நடிகர் சிம்பு இப்போது மாநாடு படத்த்தை முடிக்காமல் சுசீந்தரன் படத்தில் நடிக்க செல்லவுள்ளார் என்பது மாநாடு படக்குழுவினர் அதிர்ச்சியாகியுள்ளனர்.

நடிகர் சிம்பு இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்குப் பிறகு அவர் மிஷ்கின், சேரன் உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓகே செய்துள்ளார். இந்நிலையில் இப்போது இயக்குனர் சுசீந்தரன் சிம்புவிடம் கிராமியக் கதை ஒன்றை சொல்லி அதை ஓகே வாங்கியுள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை திண்டுக்கல்லில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இது பற்றி மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஃபெப்ஸி அமைப்பில் ஒரு புகாரைக் கொடுத்துள்ளாராம். அதன் படி நவம்பர் மாதம் மாநாடு படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதம் வைக்க உள்ளோம். அந்த மாதம் முழுவதும் படப்பிடிப்பு நடத்தி முடிக்கும் வரை சிம்பு என்னிடம் சம்பளம் கேட்கக்கூடாது. அதன் பிறகுதான் சம்பளம் தருவேன். அதற்கு சம்மதித்தால் மட்டுமே அவர் சுசீந்தரன் படத்தில் நடிக்க செல்லலாம் என சொல்லப்படுகிறது. இதனால் சிம்பு சுசீந்தரன் படத்துக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.