1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 30 மே 2022 (14:31 IST)

அஜித் சார்பா அவர் மேனேஜர் சுரேஷ் சந்திரா போட்ட வைரல் tweet…!

நடிகர் அஜித்தின் மேலாளரும் பல படங்களுக்கு மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றி வருபவர் சுரேஷ் சந்திரா.

அஜித் சமீபகாலமாக ஊடகங்களை சந்திப்பதையோ நேர்காணல்கள் கொடுப்பதையோ முழுவதுமாக நிறுத்திவிட்டார். இந்நிலையில் அவர் தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலமாக தான் சம்மந்தப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ள டிவீட் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒரு கார்ட்டூன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர் அதில்  “இதன் பொருட்டு தொடர்பு உடையவருக்கு நிபந்தனை இல்லா அன்புடன் அஜித்” என்று குறிப்பிட்டுள்ளார். சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ள அந்த புகைப்படம்  “நாம் எதை செய்தாலும், அதை விமர்சிக்க நான்கு பேர் இருப்பார்கள். அதனால் அவர்களைப் பற்றி கவலைப்படாமல் நம் விருப்பத்துக்கு ஏற்ப வாழவேண்டும்” என்று சொல்வது போல அமைந்துள்ளது.