1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 8 மே 2024 (08:02 IST)

அரண்மனை சீரிஸ்க்கு ரெஸ்ட்… ஹிட் படத்தின் மூன்றாம் பாகத்தைக் கையில் எடுக்கும் சுந்தர் சி!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான கலகலப்பு திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர் கலகலப்பு இரண்டாம் பாகத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்தார். ஆனால் அந்த படம் முதல் பாகம் போல வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இப்போது அரண்மனை 4 எடுத்து ரிலீஸ் செய்து அந்த படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இந்நிலையில் அடுத்து அவர்  கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்த படத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

ஏற்கனவே எடுத்த கலகலப்பு இரண்டாம் பாகம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.