தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் இந்தி படம் உள்பட பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் தனுஷ், அஜித்தை சந்தித்து அவரை வைத்து இயக்க தான் ஒரு கதை சொல்லியுள்ளதாகவும், அந்த கதையைக் கேட்டு அஜித் நேர்மறையான பதிலை சொல்லியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை மற்ற எல்லா விஷயங்களும் சாதகமாக அமையும் பட்சத்தில் தனுஷ் –அஜித் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக ஒரு தகவல் கடந்த சில மாதங்களாகப் பரவி வருகிறது.
இந்த படத்தைத் டாவ்ன் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி அவர் பேசியுள்ள அவர் “அந்த படம் சம்மந்தமானப் பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது. எதுவும் இன்னும் உறுதியாகவில்லை” எனக் கூறியுள்ளார்.