1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (18:23 IST)

எஸ் பி பி முழு விழிப்பு நிலையில் உள்ளார் – மருத்துவமனை அறிக்கை!

பாடகர் எஸ் பி பியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஆகஸ்ட்  5 ஆம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் மோசமானதை அடுத்து அவருக்கு வெண்ட்டிலேட்டர் மற்றும் எக்மோ ஆகிய கருவிகள் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தினமும் எஸ் பி பி உடல்நிலை பற்றி அவர் மகன் எஸ் பி சரண் தெரிவித்து வந்தார்.

இதையடுத்து இன்று மருத்துவமனை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘எஸ்பிபியின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் முழுவதும் விழிப்பு நிலையை எட்டிவிட்டார். தொடர்ந்து வெண்ட்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சையில் இருக்கிறார். உடல்நிலை சீராக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.