1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (15:47 IST)

40 கோடி சிவகார்த்திகேயன் கையில்… படம் தயாரிப்பாளர் கையில்!

சிவகார்த்திகேயன் தான் நடிக்கும் புதிய படங்களை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிக்கும் முடிவுகளில் இறங்கியுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்துக்கு அடுத்தபடியாக அதிக சந்தை மதிப்பு உள்ள கதாநாயக நடிகராக சிவகார்த்திகேயன் வளர்ந்து வருகிறார். ஆனாலும் சமீபகாலமாக அவரின் படங்கள் ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளன. இதனால் அவருக்கு பல கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் ஒரே சமயத்தில் பல படங்களில் நடிக்கும் முடிவில் சிவகார்த்திகேயன் இறங்கியுள்ளார். விரைவில் கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன் தான் நடிக்கும் படங்களை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிக்க உள்ளாராம். சமீபத்தில் அவர் லைகா நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துள்ள டான் திரைப்படத்தை 40 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு தனது சம்பளத்தையும் எடுத்துக்கொண்டு மீதிப் பணத்தில் படத்தை முடித்துக் கொடுப்பாராம். இதே பார்முலாவை முன்னர் தனுஷும் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.