1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (10:54 IST)

மாநாடு முடிந்த சந்தோஷம்… சிம்புவோடு அடுத்த படத்தில் சேரும் சுரேஷ் காமாட்சி!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி திட்டமிட்ட படி முடித்துள்ளார்.

சிம்புவின் மாநாடு திரைப்படம் தொடங்கப்பட்ட 3 ஆவது ஆண்டில் படப்பிடிப்பை முடித்துள்ளது. இந்த படத்தை திட்டமிட்ட நாட்களை விட குறைவான நாட்களில் வெங்கட்பிரபுவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் முடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது சிம்புவோடு சுரேஷ் காமாட்சிக்கு நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளார்களாம்.

அந்த படத்தை இயக்குனர் ராம் இயக்க உள்ளாராம். இப்போது சுரேஷ் காமாட்சி நிவின் பாலி மற்றும் ராம் கூட்டணியில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் முடிந்த பின்னர் அந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.