வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 29 மே 2020 (17:50 IST)

கண், காது, வாய் பொத்தி அமர்ந்து கருத்து சொல்லும் ஸ்ருதி ஹாசன்!

உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன். தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.

சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்ப்போது எந்தவித டென்க்ஷனும் இன்றி சிங்கிள் பெண்ணாக ஜாலியாக சுற்றி வருகிறார். கொரோனா லாக்டவுன் சமயம் என்பதால் உடற்பயிற்சி செய்வது, பாடுவது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது மூன்று குரங்கு பொம்மை போலவே கண், காது, வாய் பொத்திக்கொண்டு அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த மூணையும் மனசுல வச்சிக்கிட்டு, அமைதியை கடைபிடிக்கணும்ன்னு கருத்து சொல்கிறார் ஸ்ருதி ஹாசன். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது.