1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 17 ஜூலை 2021 (22:24 IST)

மாலை மங்கும் நேரம்... ரொமான்ஸ் மூடிற்கு கூட்டிச்செல்லும் ஸ்ரேயா!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது.
 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  காதல் கணவருடன் வெளிநாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஸ்ரேயா சரண் அவ்வப்போது அவருடன் வெகேஷன் சென்று ரொமான்டிக் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவார். 
இந்நிலையில் ரௌத்திரம் படத்தில் ஜீவாவுடன் மாலை மங்கும் நேரம் பாடலில் சட்டை மட்டும் அணிந்துக்கொண்டு ரொமான்ஸ் செய்தது போல் நிஜ வாழ்க்கையில் தன் கணவருடன் ரொமான்ஸ் செய்துள்ளார். சில புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு  நம்மையும் ரொமான்ஸ் மூடிற்கு கூட்டிசென்றுள்ளார்.