1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 24 மே 2024 (07:53 IST)

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக் கானின் உடல்நிலை பற்றி வெளியான தகவல்!

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேல் நடந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிந்து கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றன. இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்த KKR மற்றும் SRH அணிகள் முதல் குவாலிஃபையர் போட்டியில்  கடந்த 21 ஆம் தேதி நடந்தது..

இந்த போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியைக் காணவந்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக் கான் வீரர்களை உற்சாகப்படுத்தினார். அணி வெற்றி பெற்றதும் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார்.

இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிக்கு ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. குஜராத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இப்போது அவரின் மேனேஜர் பூஜா தத்லானி “இப்போது ஷாருக் கான் நலமாக இருக்கிறார். உங்கள் அன்புக்கும் பிராத்தனைக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.