1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 3 டிசம்பர் 2019 (15:59 IST)

"அத பத்தி நானே கவலை படல அவளுக்கு என்ன வலிக்குதாம்" - கிழிந்தது மகாலஷ்மியின் உண்மை முகம்!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் "தேவதையை கண்டேன்" சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் ஈஸ்வர் இவருக்கு ஜெயஸ்ரீ  என்ற மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கின்றனர். இதற்கிடையில் ஈஸ்வர் தான் நடித்து வரும் அதே சீரியலில் வில்லியாக நடிக்கும் நடிகை மஹாலக்ஷ்மியுடன் தகாத உறவில் இருந்து வருகிறார் என்றும் தன்னையும் தன் குழந்தையையும் கொடுமை படுத்துகிறார் என்று அவரது மனைவி ஜெயஸ்ரீ  பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
இந்த விவகாரம் நேற்றிலிருந்து ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. ஜெயஸ்ரீ   அந்த பேட்டியில் தன் கணவர் மகலாக்ஷியுடன் தகாத உறவியில் இருந்து கொண்டு தன்னை சித்ரவதை செய்கிறார் என்றும் மேலும் தன்னிடம் விவாகரத்து கேட்டு டார்ச்சர் செய்கிறார் என்று கண்ணீருடன் கூறியுள்ளார். இதனால் மகாலக்ஷ்மியை நேரில் சென்று சந்தித்து என் கணவரை விட்டு விடு என்று கூறி கதறினாராம். 
 
மேலும் மகா லக்ஷ்மிக்கும் 4 வயதில் ஒரு ஆண்  குழந்தை இருக்கிறான். அவனிடம் தன்னை அப்பா என்று கூப்பிட சொல்லி ஈஸ்வர் என் முன்பே சொல்லியிருக்கிறார். இதனால் உங்கள் பிரச்சனையில் குழந்தைகளை இழுக்காதீர்கள் என்று சொன்னதற்கு " நானே அதை பற்றி கவலை படவில்லை அவளுக்கு என்னவாம்? என்று மகாலக்ஷ்மி கேட்கிறாள் என அந்த பேட்டியில் ஜெயஸ்ரீ  கூறியுள்ளார்.  அத்துடன் ,மஹாலக்ஷ்மியை பப்பு என ஈஸ்வர் முகநூலில் கொஞ்சியுள்ள ஒரு ஸ்க்ரீன் ஷாட்டும் வெளியாகி வைரலாகி வருகிறது.