1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 14 ஆகஸ்ட் 2021 (15:36 IST)

கோவில்பட்டியில் முகாமிட்ட சசிகுமார் & சசிகுமார்!

சசிக்குமார் மற்றும் சரத்குமார் நடிப்பில் புதிதாக நா நா எனும் படம் உருவாகி வருகிறது.

சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஏராளமான படங்கள் ரிலிசுக்குத் தயாராகி காத்திருக்கின்றன. இந்நிலையில் அவர் சலீம் படத்தின் இயக்குனர் நிர்மல் குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதற்கு நா நா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவரோடு முக்கியக் கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்த படம் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக கோவில்பட்டியில் நடந்து வருகிறது. படத்தின் கதைக்களம் மும்பையில் நடப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இங்கு பிளாஷ்பேக் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டுள்ளதாம்.