1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (19:28 IST)

புஷ்பா-2 படத்தில் மீண்டும் சமந்தா நடனம்! இவர் தான் வில்லன்!

சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது.
 

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா the Rule உருவாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம். புஷ்பா சர்வதேச சந்தையை பிடிக்க முயலும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்லுவதாக இரண்டாம் பாகம் உருவாகும் என கூறப்பட்டது.

இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூலையில் ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் முதல் படத்தின் பட்ஜெட்(ரூ.150) ஐ விட சுமார் ரூ.250 கோடி அதிகமாக அதாவது ரூ.400 கோடியில் இப்படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட உள்ளது.

இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் சுகுமார் ஈடுபட்டுள்ள நிலையில், இப்படத்தின் முதல்பாகத்தில்  நடிகர் விஜய்  சேதுபதியை நடிக்க கேட்டிருந்ததாகவும், ஆனால் அவர் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்கவில்லை எனவும் கூறப்பட்டது.
vijay sethupathy

இந்த நிலையில், புஷ்பா-2 படத்தில் விஜய்சேதுபதி ஒரு போலீச் உயரதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்கவைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஜய்சேதுபதியை நடிக்கவைக்க அல்லு அர்ஜூன் சிபாரிசு செய்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் முதல் பாகத்தில் ஓ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடியதைப் போல் சமந்தாவை 2 ஆம் பாகத்தில் ஆடுகிறார் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, சுகுமார் தயாரிப்பில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான உப்பெனா என்ற படத்தில் விஜய்சேதுபதில் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.