வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (18:29 IST)

நீயா நானா என பார்த்துவிடுவோம்: எஸ்பிபியிடம் சவால்விட்ட ஜானகி!

நீயா நானா என பார்த்துவிடுவோம்: எஸ்பிபியிடம் சவால்விட்ட ஜானகி!
மறைந்த எஸ் பி பாலசுப்ரமணியம் குறித்த நினைவலைகளை பல சினிமா பிரமுகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் பிரபல பின்னணி பாடகி எஸ் ஜானகி அவர்களும் பேட்டி ஒன்றில் எஸ்பிபி உடன் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றை குறிப்பிட்டு உள்ளார்
 
எஸ்பிபியும் தானும் கிட்டத்தட்ட தினமும் பாடல் ரிக்கார்டிங்கில் இருப்போம் என்றும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு பாடுவோம் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்
 
ஒரு சில பாடல்களை பாடும்போது யார் நன்றாக பாடுவது என்பதை நீயா நானா என பார்த்துவிடுவோம் என்று போட்டி போட்டதாகவும் இதற்கு நடுவராக அந்த இசை அமைப்பாளரை இருப்பார் என்றும் பெரும்பாலும் அவர் தான் இந்த போட்டியில் வெற்றி பெறுவார் என்றும் ஜானகி கூறியுள்ளார் 
 
மேலும் எஸ்பிபி அவர்கள் அடிக்கடி தன்னுடைய வீட்டிற்கு வருவார் என்றும் தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக இருந்த அவருடைய இழப்பு தனக்கு பேரிழப்பாக இருப்பதாகவும் ஜானகி அந்த பேட்டியில் கூறியுள்ளார்