1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By V.M.
Last Updated : வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (14:13 IST)

கேரளாவுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - சித்தார்த்

கேரள மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக மழை பெய்து வருகிறது.  கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் 117 பேர்  உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.  வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு 320க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
 
இதனிடையே கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.  அந்தவகையில் நடிகர் சித்தார்த் தன் பங்குக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
நான் உனக்கு தைரியம் தருகிறேன், நான் உன்னை வேண்டிக்கொள்கிறேன்! என்று குறிப்பிட்டு (#KeralaDonationChallenge) என்ற ஹேஷ்டேக்கில் நீங்களும் கேரளாவுக்கு உதவலாம். என்று குறிப்பிட்டுள்ளார்.