1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 மே 2021 (17:53 IST)

கே.ஜி.எப் பட இயக்குநரின் அடுத்த படத்தில் ஹீரோ இவர்தான் !

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் ஜுனியர் என்.டி.ஆர். இவர் கே.ஜி.எஃப் பட இயக்குநரின் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

பாகுபலி படத்தை இயக்கிய  ராஜமெளலியின் இயக்கத்தில் உருவாகிவரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் நடித்துவருகின்றானர். இப்படத்திற்கு உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஜூனியர் என்.டி.ஆர். தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து மனம் விட்டுப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

நான் தற்போது ராஜமெளலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துவருகிறேன். இப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிந்துவிட்டது., கொரோனா பரவலால் இன்னும் கால்வாசி ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் நடைபெற்றுவருகின்றன.

இப்படத்தை அடுத்து,நான் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஒரு பிரமாண்ட படத்தில் நடிக்கவுள்ளேன். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரையில் வெளியாகும் எனத் தெரிவித்தார்.

மேலும், கொரொட்டலா சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தை முடித்தபின்னர், கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க்கவுள்ளேன். இதற்காக திரைக்கதை எழுதும் பணிகள் முழு வீச்சில் தயாராகிவருகிற்து என தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான கே.ஜி.எப் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தியதுபோல் ஜுனியர் என்.டி.ஆர் -  பிரசாந்த் நீல் இணையும் படத்திற்கும் பெரும் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.