1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 7 நவம்பர் 2020 (20:43 IST)

''செம்பருத்தி'' சீரியலில் இருந்து நீக்கம்… பிரபல நடிகை கண்ணீிர்…ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல சேனலில் ஒளிபரப்பாகும் செம்பருத்தித் தொடரில் இருந்து  நடிகை ஜனனி அசோக்குமார் நீக்கப்பட்டதால் அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ள காட்சி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் செம்பருத்தி. இத்தொடரில் கார்த்திக் ராஜ், ஷாபனா உள்ளிட்டோர் நடித்து வந்தனர். இதில், அகிலாண்டேஸ்வரின் 2 வது மருமகளாக நடித்துப் புகழ் பெற்றவர் ஜனனி அகோக் குமார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், செம்பருத்தி சீரியலில் இனி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜனனி அசோக்குமார் தனது யூடியூப் சேனனில் கூறியுள்ளதாவது; செம்பருத்தித் தொடரில் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த எனக்குப் பதில் இன்னொருவர் நடிக்கவுள்ளார்.அவருக்கு உங்கள் ஆதரவைக் கொடுங்கள் என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.#aiswarya #