வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (15:19 IST)

கொரோனா சிகிச்சைக்கு மண்டபத்தைக் கொடுத்தாரா ரஜினி ?

கொரோனா சிகிச்சைப் பெற தனது கல்யாண மண்டபத்தை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 690 ஆக உள்ளது. இதுவரை இந்த வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்புகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வரும் நாட்களில் வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது.

இதையடுத்து கமல் தனது வீட்டையும், விஜயகாந்த் தனது கட்சி அலுவலகம் மற்றும் கல்லூரியையும், திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தையும் தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினி கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தை தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளதாக ஒரு செய்தி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் அது உண்மையா என்பது தெரியவில்லை.