ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (16:16 IST)

பாலிவுட்டின் சோகக் கதைக்கு பதான் முடிவுகட்டும்… பிருத்விராஜ் பேச்சு!

பாலிவுட் சினிமாவுக்கு இந்த ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டு வெளியான பல படங்கள் படுதோல்வி படங்களாக அமைந்தன.

பாலிவுட்டில் சமீபகாலமாக பட்ங்களுக்கு எதிராக பாய்காட் ட்ரண்ட் இணையத்தில் உருவாகி வருகிறது. அமீர் கானின் லால் சிங் சத்தா உள்ளிட்ட பல படங்களுக்கு இப்படி ஹேஷ்டேக்குகள் உருவாகி படத்தின் வசூலை கடுமையாக பாதித்தன. இதனாலும் இன்ன பிற காரணங்களாலும், இந்த ஆண்டு வெளியான முன்னணி நடிகர்களின் பல படங்கள் படுதோல்வி அடைந்தன. இதனால் பாலிவுட் சினிமாவுக்கு இந்த ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமைந்தது.

சமீபத்தில் வெளியான திரிஷ்யம் 2 ஆம் பாகம் வெற்றி பெற்று ஆறுதல் அளித்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசிய மலையாள நடிகர் பிருத்விராஜ் “கூடிய விரைவிலேயே பாலிவுட்டுக்கு ஒரு வெற்றி வரவுள்ளது. பாலிவுட்டின் சோகக்கதை பதான் படத்தோடு முடிவுபெறும்” எனக் கூறியுள்ளார்.