1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (17:08 IST)

பாகுபலி 2 பிரமாண்ட வெற்றி… நடிகர் பிரபாஷ் நன்றி தெரிவித்து அறிக்கை !

பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி மூன்றாண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ரசிகர்கள் அப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

பாகுபலி படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரமாண்டமான வெற்றியடைந்து வசூல் சாதனை படைத்தது.

இதுகுறித்து நடிகர் பிரபாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாகுபலி  படம் தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல.. என் வாழ்கையில் மிகப்பெரிய படம் ஆகும். அதற்காக படத்தின் இயக்குநர் ராஜமௌலிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். அத்துடன் பாகுபலி 2 வெளியாகி மூன்றாண்டுகள் ஆகிறது. எனவே நான் பெற்ற அனைத்து பட வாய்ப்புகளுக்காக நான் சந்தோஷமடைகிறேன் என தெரிவித்துள்ளார்.