1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (18:49 IST)

ஆந்திர வெள்ளம்… பிரபாஸ் ஒரு கோடி நிதியுதவி!

ஆந்திராவில் கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் இப்போது கனமழை பெய்து சில மாவட்டங்களில் வெள்ளச்சேதம் அதிகமாகியுள்ளது. திருப்பதி போன்ற பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கும் உதவும் விதமாக தெலுங்கு சினிமா நடிகர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது நடிகர் பிரபாஸ் ஒரு கோடி ரூபாய் நிதியாக அளித்துள்ளார்.