1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 19 ஏப்ரல் 2018 (13:15 IST)

மறுபடியும் வில்லனாக நடிக்கிறார் மிஷ்கின்

‘சவரக்கத்தி’ படத்தைத் தொடர்ந்து இன்னொரு படத்திலும் வில்லனாக நடிக்கிறார் மிஷ்கின்.
ஜி.ஆர்.ஆதித்யன் இயக்கத்தில் வெளியான ‘சவரக்கத்தி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் மிஷ்கின். இயக்குநர் ராம், பூர்ணா இருவரும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதி, தயாரித்ததும் மிஷ்கின் தான்.
 
இந்நிலையில், தியாகராஜன் குமாரராஜாவிடம் உதவியாளராகப் பணியாற்றும் அருண் மாதேஷ்வரன் இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் மிஷ்கின். ‘தரமணி’ வசந்த் ரவி, ஹீரோவாக நடிக்கிறார். தர்புகா சிவா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.