1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (08:44 IST)

அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற திட்டமா? க்ரீன்கார்ட் அப்ளை செய்த கோத்தபய

kothapaya
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தற்போது சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்திற்கு மாறியுள்ள கோத்தபய ஒரு மாதம் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என கூறப்பட்டிருந்தது 
 
இதனையடுத்து அவர் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்காக கிரீன் கார்டு அப்ளை செய்துள்ளதாக தெரிகிறது 
 
அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதி அளித்தால் அவர் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவார் என்றும் கூறப்படுகிறது 
 
இலங்கையில் தற்போது போராட்டம் தணிந்து உள்ளதால் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே திரும்புவார் என்று நேற்று செய்தி வெளியான நிலையில் இன்று அவர் அமெரிக்காவில் தங்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.