ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:44 IST)

அணியில் இருந்தால் கூட இவ்வளவு பேர் பேசி இருக்க மாட்டார்கள்… அஸ்வின் பற்றி இர்பான் பதான்!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார்.

இங்கிலாந்தில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் அஸ்வினுக்கு நான்கு டெஸ்ட்களாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்குக் காரணமாக ஆடுகளம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லை என சொல்லப்படுகிறது. இங்கிலாந்து அணியிலும் சுழல்பந்து வீச்சாளரை தேர்வு செய்வதில்லை. ஆனால் ஜடேஜாவுக்கு கொடுத்த வாய்ப்பை அஸ்வினுக்கு கொடுத்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஏனென்றால் அவரும் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்தான்.

இந்நிலையில் அஸ்வின் ஒதுக்கப் படுவதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ‘இப்போது அஸ்வினை நினைவு வைத்திருக்கும் அளவுக்கு வேறு யாருக்கும் நடப்பது வாழ்நாளில் சாத்தியமில்லை’ என நக்கலாகக் கூறியுள்ளார்.