1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 3 நவம்பர் 2020 (21:03 IST)

’’நான் பிரமாதமான நடிகன் இல்லை...அவரது இயக்கத்தில் நடிக்கத் தவித்தேன்’’- நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சூர்யா தான் ஒரு பிரமாதமான நடிகன் இல்லை என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது :

சினிமாவில் நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றுதான் நடிக்க விரும்புகிறேன். நான் யாரைச் சந்திக்கிறோம்…யார் நம்மை என்ன செய்ய வைக்கிறார்கள் என்பது இங்கு முக்கியம்…ஆனால் சினிமாவில் நான் புகழ் பெறவோ எனது அடையாளத்தைக் காட்டிக்கொள்ளவோ நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், என்னால் உடனே கேமரா முன்னால் நடிக்க முடியாது…ஒரு  கதையில் எனது வாழ்க்கையில் நடந்த உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் இருந்தால் அதில் நான் தைரியமாக நடிப்பேன்.

ஒரு புதிய முயற்சியில் ஈடுபடும்போதும் பயம் வரும் அப்படி வந்தால்தான் நல்ல வளர்ச்சி; நான் நினைத்துப் பார்க்க இடம் சினிமாவில் எனக்குக் கிடைத்திருக்குக்கிறது…

தற்போது நடித்துள்ள சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள சூரரைப் போற்று புதியமுயற்சி; இனி அடுத்து, நவரசா என்ற ஆந்தாலஜியில் நடிக்கவுளேன் அடுத்து பாண்டியராஜ் இயக்கத்திலும் அதற்கடுத்து வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் எனது கேரியர் முடிவதற்கு சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவேண்டுமெனத் தவித்தாகவும் தெரிவித்துள்ளார்.