1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 24 மே 2021 (09:56 IST)

சரியான செருப்படிக் கேள்வி: ரசிகரின் கேள்வியை விமர்சனம் செய்த பார்த்திபன்!

ரசிகர் ஒருவர் டுவிட்டரில் கேட்ட கேள்விக்கு சரியான செருப்படி கேள்வி என நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் விமர்சனம் செய்துள்ளார் 
 
கொரோனா வைரஸ் நேரத்தில் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி டுவிட் ஒன்றை பார்த்திபன் சமீபத்தில் பதிவு செய்திருந்தார். அதில் ’நாளை சிரிக்க.. சிறக்க இன்று உள்ளிருப்போம் உறவே என்று பதிவு செய்துள்ளார் 
 
இந்த டுவிட்டருக்கு பதிலளித்த ஒரு ரசிகர், ‘உள்ளிருந்தல் யார் உணவு தருவார்கள் என்ற கேள்வியை கேட்டார். இந்த கேள்வியைத்தான் பார்த்திபன் சரியான செருப்படி கேள்வி என்று விமர்சனம் செய்து விட்டு அதே நேரத்தில் ’சரியான செருப்படிக் கேள்வி. கொரோனாவை குறைவான மிருகமாக்கிவிடுகிறது பசி. இருந்தாலும் உள் இருந்தா ... உணவை உண்ண நாமிருப்போம் -நாளை! இல்லையெனில் நம்மை உண்ண மண்ணிருக்கும்’ கூறியுள்ளார். ரசிகரின் கேள்வியும் பார்த்திபனின் பதிலும் தற்போது வைரலாகி வருகிறது.