1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (20:44 IST)

பிரபல நடிகை போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு !போலீசார் வழக்குப் பதிவு

பெங்களூரில் போதைப் பொருள் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பிரபல நடிகை  ராகினி திவேதி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கன்னட சினிமாத்துறையினருக்கு போதைபொருள்களை அளித்து வந்த லோம் பெப்பர் சாமா என்பவரை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

இவர் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்பதால்  இங்கு எப்படி யார் மூலம் போதைப் பொருள் கடத்துகிறார் என்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பெங்களூரில் போதைப் பொருள் கும்பலிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ராகினிதிரிவேதி மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.