1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (23:15 IST)

முடிந்தால் தடுத்துப் பார் ! மிரட்டல் விடுத்த கட்சிக்கு சவால் விடுத்த பிரபல நடிகை !

நடிகை கங்கனா ரெனாவத் பாதுகாப்பில்லாத மும்பையில் வசிப்பது என்பது பாகிஸ்தான் ஆகிரமிப்பு காஷ்மீரில் வசிப்பது போன்றது என கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் நடிகர் சுஷாந்த் தற்கொலை குறித்து வரிசு அரசியலைக் குற்றம் சுமத்தி வரும் அவர் கரண் ஜோகர் போதை மாஃபியா கும்பல் என்று சாடியுள்ளார்.

இவர் மும்பை குறித்து தெரிவித்த கருத்துக்கு சிவசேனா கட்சியின எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதற்குப் பதிலளித்த கங்கனா வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி மும்பை வருவேன் முடிந்தால் என்னைத் தடுத்துப் பார் எனத் தெரிவித்துள்ளார்.