வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2024 (12:03 IST)

மீண்டும் இயக்குனர் ஆகும் தனுஷ்.. சொந்த ஊரில் நடக்கும் ஷூட்டிங்!

பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து பல படங்களைக் கைவசம் வைத்துள்ள தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்கி நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் நடக்க உள்ளதாகவும், தற்போது அதற்கான லொகேஷன் தேர்வுகள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் தயாரிப்பாளர், மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.