வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 10 ஜூன் 2019 (16:46 IST)

கிரேஸி மோகனுக்கு எதிரிகளே கிடையாது - நடிகர் எஸ்.வி.சேகர் புகழாரம்

தமிழ்சினிமாவில் பிரபல கதாசிரியரும், நாடகாசிரியருமான கிரேஷி மோகன் உடல்நலக் குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் காலமானார். இந்நிலையில் இதுகுறித்து பிரபல நடிகர் எஸ்வி சேகர்:  கிரேஸி மோகனுக்கு எதிரிகளே கிடையாது என்று கூறியுள்ளார்.
தமிழ்சினிமாவில் பிரபலமான கதாசிரியர் மற்றும் வசனகர்த்தா கிரேஷி மோகன். இவர் ஏராளமான சினிமா படங்களுக்கு சிறப்பாக திரைக்கதை, வசனம் எழுதி புகழ்பெற்றுள்ளார்.
 
குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா படத்திற்கு சிறந்த முறையில் நகைச்சுவையாக வசனம் எழுதி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
 
சமீபத்தில் கூட சென்னையில் அவர் நாடகத்தை எழுதி இயக்கி மேடையில் அரங்கேற்றினார். அதில் அவரது எழுத்துக்கும் நகைச்சுவை வசனத்துக்கும் ஏராளமான நடிகர்கள் , இயக்குநர்கள் ரசிர்கர்களாக இருக்கின்றனர்.
 
இந்நிலையில் கிரேஷி மோகன் தற்போது உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். அவர் விரைவில்  நலம்பெற வேண்டுமென அவரது ரசிகர்களும்,  மக்களும் பிராத்தனை செய்து வந்தனர்.
 
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணி அளவில்  இறந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அவரது வீட்டிற்கு அவரது உடல் கொண்டுசெல்லப்பட்டது. 
 
அவருக்கு வயது 66 ஆகும். கே பாலச்சந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை என்ற படத்தில், கிரேஸி மோகனை வசனகர்த்தாவாக சினிமாவில்  அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது ஏராளமான சினிமா பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி  செலுத்திவருகின்றனர்.
 
இந்நிலையில் பிரபல நடிகர்கள் கிரேஸி மோகனுக்குப்  புகழாரம் சூட்டியுள்ளார்கள்.
 
நடிகர் எஸ். வி சேகர் : கிரேஸி மோகைன் நாடகங்களில் மாது, ஜானகி,சீனு ஆகிய கதாபாத்திரங்கள் பிரபலமானவை. கூட்டுக்குடும்பத்தின் மீது நம்பிக்கையுள்ள கிரேஸி மோகனுக்கு எதிரிகளே கிடையாது . அவர், மக்கள் முகம் சுளிக்காத வகையில் வசனங்களை எழுதியவர் என்று தெரிவித்துள்ளார்.
 
மோகன்ராம் :கிரேஸி மோகன் நகைச்சுவை வசனம் அமைந்த படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று தெரிவித்தார்.
 
தன்னுடைய நகைச்சுவை முலம் எல்லோரையும் சிரிக்க வைத்தவர் கிரேஸி மோகன்.அவரது இழப்பைத் தாங்க குடும்ப உறுப்பினர்கள் பழக வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.