1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (13:52 IST)

இன்னும் சிலமணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை

meteorological
இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, விருதுநகர்‌, இராமநாதபுரம்‌, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, அரியலூர்‌, கடலூர்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 20 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்றும் நாளையும் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva