வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (17:38 IST)

ஹரி -அருண்விஜய் படத்தில் இணைந்த பிரபலம் ! ரசிகர்கள் மகிழ்ச்சி

ஹரி – அருண்விஜய் இணையவுள்ள படத்தில் மேலும் ஒரு பிரபலம் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குனர் ஹரி இயக்கவுள்ள சூர்யாவை வைத்து இயக்கவிருந்த அருவா படம் கைவிடப்பட்ட நிலையில், அடுத்து தன்  மைத்துனர் அருண் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.  இது  அருண்விஜய்யின் 33 வது படம்  ஆகும்.

 
இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி அடுத்தக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் ஏற்கனவே ஒப்பந்தமான நடிகை தற்போது ஜெயபாலன் என்ற நடிகர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் என்ற திரைப்படத்தில் பேட்டக்காரன் என்ற கேரக்டரில் அசத்தலாக நடித்தவர் இவர் என்பதும் அதன் பின்னர் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றுள்ளார்.

இந்நிலையில்  இப்படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்துள்ள  புகழ் இணைந்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் ஹரியின் அதிரடி ஆக்சன் படமாக் உருவாகவுள்ளது. இம்மாதத்தில் படப்பிடிப்புகள் தொடங்கி ஆக்ஸ்ட் மாதம் திரைக்குவரவுள்ளது.#DirectorHARI