வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2019 (18:42 IST)

உள்ளாடை அணியாமல் ட்ரான்ஸ்பிரன்ட் ட்ரஸ் போட்டு சுத்துறா...! தட்டி கேட்டால் சண்டைக்கு வராங்க!

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக கடந்த 2017ம் ஆண்டு துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்தாலும் தொடர்ந்து 2 சீசன்களை கடந்து மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனாலும் தற்போது சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் தான் இருக்கிறது. 


 
தமிழ்நாடு மட்டுமின்றி பெங்களூர் , மலேசியா, இலங்கை என் பல்வேறு இடங்களில் இருந்து 17 போட்டியாளர் கலந்துகொண்ட இந்த மூன்றாவது சீசனில் தமிழ் சினிமா ரசிகர்களின் ப்ரேசியமான நகைச்சுவை நடிகையான மதுமிதாவுக்கு பங்கேற்றிருந்தார். அந்நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட டாஸ்க் ஒன்றிற்காக காவிரி பிரச்னையை பற்றி பேசியது சக போட்டியாளர்களால் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இந்த வாக்குவாதங்களுக்கும் கிண்டல் பேச்சுக்கும் முற்றிப்புள்ளி வைக்க தன் கையை அறுத்துக்கொண்டு ரத்தம் கொட்ட கொட்ட தான் பேசிய கருத்து உண்மை  என்பதை நிரூபிக்க முயற்சித்தார் மதுமிதா. 
 
ஆனால், நிகழ்ச்சியின் விதிகளை மீறியதாக கூறி அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இதுபற்றிய தெளிவான உண்மை வெளிவராதிருந்த நிலையில் இன்று மதுமிதா பேட்டியளித்திருந்தார்.  அதில் தனக்கு நடந்த அக்கிரமங்களை கூறிய அவர் மற்ற போட்டியாளர்களின் நடவடிக்கைகளை பற்றியும் தெரிவித்துள்ளார். 


 
" ஒரு பெண் முதல் நாளிலிருந்தே மாலை நேரம் ஆகிவிட்டால் உள்ளாடை போடாமல் ட்ரான்ஸ்பிரன்ட் ஆடை அணிந்துகொண்டு சுத்துறா, இதை நானும் வானிதாவும் கூப்பிட்டு கண்டிக்கிறோம் ஆனாலும் அதை அவள் கேட்கவில்லை.. பின்னர் மறுநாளே கவினுடன் காதல்.. நான்காவது நாள் கவின் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் பரவாயில்லை என்ற வார்த்தை வேறு.. பின்னர் அவன் விட்டு ஒதுங்கியதும் முகினுடன் காதல் மலர்கிறது.. 6வது நாள் பேபி(பாட்டெல்) குழந்தை பிறக்கிறது ... இதெல்லாம் தட்டி கேட்டதற்கு என்னுடன் அனைவரும் சேர்ந்து சண்டைக்கு வந்துவிட்டனர் .