1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (12:09 IST)

அக்ஷராவின் மண்டை உடைத்த சிபி... தலைவர் பதவிக்காக அழுது புலம்பும் அக்ஷரா!

பிக்பாஸ் வீட்டில் நியமாகவும், தைரியமாகவும் விளையாடி ஸ்ருதி நேற்று வீட்டை விட்டு விக்ஷனில் வெளியேறினார். அவர் வெளியேறியதற்கு முக்கிய காரணம் அந்த நாணயம் தான். இருந்தும் அவரை வெளியேறியது நியாயமில்லை என ஆடியன்ஸ் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். 
 
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான தலைவர் போட்டிக்கு ஆள் தேர்வு இன்று நடைபெற்றது. அதற்காக செண்பகமே செண்பகமே டாஸ்க்கில் வெற்றி பெற்ற அணியில் இருந்த 7 பேரும் இந்த வார கேப்டன் போட்டிக்கு நேரடியாக தேர்வானார்கள். 
 
அதில்  பாவனி வருண், பிரியங்கா, அக்ஷ்ரா, அபிநய், நீருப்  ஆகியோரது புகைப்படங்கள் பொம்மைகளாக வைக்கப்பட்டு பொம்மலாட்டம் டாஸ்க் ஐந்தில் எந்த நபர் தலைவர் ஆகக்கூடாது என நினைக்கிறீர்கள் அவர்கள் தலையை உடைக்கலாம் என கூற சிபி முதல் ஆளாக அக்ஷரா தலையை உடைத்துவிட்டார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ...