1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (17:08 IST)

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பாடகர் – பின்னணி என்ன?

தெலுங்கு பிக்பாஸ் சீசன் நான்கில் இருந்து பாடகர் நோயல் சீன் மருத்துவக் காரணங்களுக்காக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேற்குலகில் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி பாலிவுட்டுக்கு பரவியதை அடுத்து இப்போது தென்னிந்தியாவில் நான்கு ஆண்டுகளை தொட்டுள்ளது. தமிழில் நான்கு ஆண்டுகளும் கமலே தொகுத்து வழங்க தெலுங்கில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரபலம் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல் முறையாக ஒரு பெண் பிரபலத்தை தொகுத்து வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது வேறு யாருமில்லை நாகார்ஜுனாவின் மருமகளும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவருமான சமந்தாதானாம். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பாடகர் நோயல் சீன் மருத்துவக் காரணங்களுக்காக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாராம்.