1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2020 (20:34 IST)

விவசாய நிலத்தை தத்தெடுத்த பாகுபலி ஹீரோ

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில்  சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் பாகுபலி1, 2. இந்த இரண்டு படங்களும் பெரிய ஹிட் ஆனது. பெரும் வசூல் சாதனை படைத்தது.

இப்படத்தில் நடித்த  பிரபாஸுக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் உருவாகினர். அவரது மார்க்கெட் விரிவானது.

இந்நிலையில்,   சில ஆண்டுகளுக்கு முன்  தெலுங்கானா எம்.பி. சந்தோஷ் குமாருடன் இணைந்து கிரீன் இந்தியா சேலஞ்ஸ் திட்டத்தில் மரங்களை நட்டு வைத்தார்.

இந்நிலையில், தெலுங்கானா மாநில ஹைதராபாத்தில், காஜிபல்லி அர்பன் காட்டுப் பகுதியில்  1650 ஏக்கர் நிலத்தை தத்தெடுத்துள்ளார்.

மேலும் இதற்காக அவர் 2 கோடி ரூபாய் பணத்தை நன்கொடையாகக் கொடுத்துள்ளார். அப்பகுதியில் இன்று பிரபாஸ், சந்தோஷ்குமார், எம்.பி. வனத்துறை அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது நலத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.