அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!
கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மிகக் குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடந்த முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது சென்னையில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் நடத்தப்பட்ட ஷூட்டிங்குக்கு முறையான அனுமதி பெறவில்லை என காவல்துறையினர் இன்று ஷூட்டிங்கை நிறுத்தியுள்ளனர். அனுமதி பெற்றபின்னர் ஷூட்டிங்கை நடத்திக் கொள்ள அவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.