1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 22 ஜனவரி 2022 (10:10 IST)

படப்பிடிப்பை முடித்த பிரபு சாலமன்… அஸ்வினுக்கு திருப்புமுனையாக அமையுமா?

பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்து அவரை கடனாளி ஆக்கின. இந்நிலையில் அவரின் மகன் சஞ்சய்யை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்துக்கான ஆரம்பக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.

மேலும் மற்றொரு படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் அஸ்வினைக் கதாநாயகனாக்கி ஒரு புதிய படத்தை இயக்கி வந்தார். பிரபுசாலமனின் மற்ற படங்களைப் போல இந்த படமும் காடு சார்ந்த கதைக்களத்தைக் கொண்டதுதானாம். இந்நிலையில் இந்த படத்தின் முழுப் படத்தையும் முடித்துள்ளாராம். விரைவில் படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ஆடியோ லான்ச் விழாவில் வாயை விட்டு கேலி செய்யப்பட்டு வரும் அஸ்வின் குமார் இந்த படத்தை பெரியளவில் நம்பியிருப்பதாக சொல்லப்படுகிறது.