1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 11 ஜூன் 2021 (15:46 IST)

பேமிலி மேன் சீரிஸூக்கு பின்னர் சமந்தாவுக்கு வந்த வாய்ப்பு!

சமந்தா இப்போது மற்றொரு வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

’தி ஃபேமிலிமேன் 2’ தொடர் ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களின் உணர்வுகளை பெருமளவு புண்படுத்தி உள்ளது அதனால் இதைத் தடைசெய்ய வேண்டுமென சீமான் வைகோ உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தினர். இத்தொடரில் பிரதான கேரக்டரில் நடித்துள்ள சமந்தாவுக்கு எதிர்ப்புகள் குவிந்தது. ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களின் உணர்வுகளை இந்த தொடர் பெருமளவு புண்படுத்தி உள்ளது என்று தமிழக அரசு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரருக்கு கடிதம் எழுதியது.

பரபரப்புகளுக்கு மத்தியில் இந்த தொடரும் ரிலீஸாகி விட்டது. அதில் நடித்த சமந்தாவுக்கு ஆதரவும் எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன. இந்நிலையில் இதன் மூலம் கிடைத்த புகழின் மூலமும் சமந்தாவுக்கு இப்போது மற்றொரு வெப் சீரிஸில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளதாம். விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.