1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (10:36 IST)

5 வருடம் அடுத்த படத்தை பற்றி அறிவித்த இயக்குனர்… அதிலும் ஒரு செம்ம சர்ப்ரைஸ்!

2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது அடுத்த படம் பற்றி அறிவித்துள்ளார்.

ஒரு இயக்குனர் ஒரு ஹிட் படம் கொடுத்தால் உடனடியாக அவர் வீட்டுக்கு தயாரிப்பாளர்கள் படையெடுப்பார்கள். அந்த வகையில் 2015 ஆம் வருடம் பிரேமம் என்ற மிகப்பெரிய படத்தைக் கொடுத்தவர் அல்போன்ஸ் புத்திரன். ஆனால் அதன் பிறகு 5 வருடமாக அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை.

இந்நிலையில் நேற்று தனது சமூகவலைதளப் பக்கத்தில் தனது அடுத்த படத்தை பற்றி அறிவித்துள்ளார். பாட்டு என்று பெயரிடப்பட்டுள்ள அவரது அடுத்த படத்தில் பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை எழுதி இயக்கும் அல்போன்ஸ் புத்திரனே இசையும் அமைக்க இருக்கிறார். படத்தைப் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லியுள்ளார்.