1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (10:34 IST)

சிவகார்த்திகேயன் இயக்குனர் படத்தில் கார்த்தி… அதுவும் இரட்டை வேடமாம்!

இரும்புக் குதிரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களின் இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கும் படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கி கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படம் ஹீரோ. இந்தப் படத்தில் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை முறைகேடாக தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் வில்லனுக்கு எதிராக மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் கல்வியியல் ஆர்வலராக அர்ஜுன் நடித்திருந்தார். இந்த படத்தை இரும்புத்திரை படத்தை இயக்கியிருந்த பி எஸ் மித்ரன் இயக்கினார். ஆனால் படம் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் தனது அடுத்த படத்தை எப்படியாவது ஹிட் ஆக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பி எஸ் மித்ரன் இப்போது தனது அடுத்த திரைக்கதையை எழுதி முடித்துள்ளார். அதில் கார்த்தி நாயகனாக நடிக்க உள்ளார். அதுவும் சிறுத்தைப் படத்துக்குப் பின் இரட்டை வேடத்தில். ஏற்கனவே பொன்னியின் செல்வன், சுல்தான், முத்தையா இயக்கும் படம் எனக் கைவசம் வைத்திருக்கும் கார்த்தி நான்காவதாக இந்த படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.