வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (17:01 IST)

கொரோனா லாக்டவுனில் அஜித் வளர்த்த மூலிகை தோட்டம்!

கொரோனா காலத்தில் வீட்டில் ஓய்வாக இருந்த அஜித் தனது இல்லத்தில் பூக்கள் மற்றும் மூலிகை செடிகளை வளர்த்துள்ளாராம்.

கொரோனா காரணமாக நடிகர் நடிகைகள் எல்லாம் ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் ஓய்வில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அதுபோல இருப்பவர்கள் நேரத்தைக் கொல்ல புதுப் புது பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கி வந்துள்ளனர்.

அந்த வகையில் நடிகர் அஜித் தனது வீட்டு தோட்டத்தில் பூச்செடிகள் மற்றும் மூலிகை செடிகளை வளர்த்துள்ளாராம். ஏற்கனவே துப்பாக்கிச் சுடுதல் மற்றும் ட்ரோன் இயக்குதல் ஆகியவற்றை ஹாபியாக கொண்டவர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.