வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 அக்டோபர் 2020 (16:50 IST)

சல்மான் கானை பிரிந்தது ஏன் ? ஐஸ்வர்யா ராய் சொன்ன பதில்!

இந்திய சினிமாவின் ஸ்டார் ஜோடிகளாக சுற்றித் திரிந்தவர்கள் சல்மான் கானும் ஐஸ்வர்யா ராயும்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்தது உலகமே அறிந்தது. இதற்காக சல்மான் கான் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாருக் கானை அறைந்தது எல்லாம் மிகப்பரபரப்பாக பேசப்பட்ட செய்தி. ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்தனர். பின்னர் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். சல்மான் கான் அதன் பின்னரும் சிலரைக் காதலித்து எல்லாம் முறிந்து இப்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் தான் ஏன் பிரிந்தேன் என்பது குறித்து பேசியது இப்போது இணையத்தில் பரவி வருகிறது. தான் உடல் அளவிலும் மனதளவிலும் காயம் பட்டதால்தான் காதலை முறித்துக் கொண்டதாகவும், இனிமேல் சல்மான் கானோடு சேர்ந்து நடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.