வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (12:19 IST)

எதுவா இருந்தாலும் மக்கள் பேசுற அளவுக்கு இருக்கணும்... அதிதி பகிரும் சீக்ரெட்

படவாய்ப்புகள் இல்லாதது குறித்த கேள்விக்கு நடிகை அதிதி ராவ் பதிலளித்திருக்கிறார். 
 
இயக்குனர் மணிரத்னத்தின் காற்று வெளியிடை மற்றும் செக்க சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் அதிதிராவ். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வர வேண்டும் என்ற இவரது கனவு இதுவரை நிறைவேறவில்லை. இதனால், அக்கட தேசத்தில் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அங்கும் சரியான வாய்ப்பு இல்லாததால், பாலிவுட் மற்றும் தமிழ் சினிமா வாய்ப்புகளுக்காக தூது விட்டுக்கொண்டிருக்கிறார். 
 
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் சைக்கோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். தவிர தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அதிதி. வாய்ப்புகள் இல்லாதது குறித்து அவரிடம் கேட்டதற்கு, பட வாய்ப்புகள் கிடைக்காதது குறித்து கவலைப்பட மாட்டேன். அப்படிப் பார்த்தால், இன்றைய தேதியில் தேசிய அளவில் அதிக விளம்பரப் படங்கள் நடித்து வரும் நடிகைகளில் நானும் ஒருத்தி. திரைப்படமோ, விளம்பரப் படமோ மக்கள் பேசும் அளவுக்கு இருக்க வேண்டும் என போல்டாக ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார் அம்மணி.