1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (23:05 IST)

கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய சித்த மருத்துவரை பாராட்டிய நடிகர் சூரி

இந்தியா முழுவதும் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அரசு கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுக்காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் வீரபாபு மூலிகை கசாயத்தால் நோயாளிகளை குணப்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து நடிகர் சூரி ஒரு அறிக்கை வெளியிட்டு அதில் வீரபாபுவை பாராட்டியுள்ளார். கொரோனாவுக்கு கசாயம் மட்டுமே கொடுத்து இதுவரை 3500 பேரை குணப்படுத்தி உள்ளார். ஒருவர் கூட உயிரிழப்பு நேரவில்லை. மேலும் வீரபாபு நோயாளிகளைத் தொட்டு சிகிச்சை அளிக்கிறார். அவர் கொடுக்கிற கசாயம் கறிக்குழம்பு போல இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் ஊருக்குள் புகுந்த கரடி ஒன்று மனிதர்களைக் கடுமையாகத் தாக்கி வருவது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.