ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (17:24 IST)

இயக்குநர் மிஸ்கின் எடுத்த அதிரடி முடிவு ! ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் முன்னணி  இயக்குநர் மிஸ்கின். இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். அவ்வப்போது குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.

வாசிப்பாளராகவும், சினிமா விமர்சகராகவும் அறியப்பட்ட அவர் கொரொனா காலத்தில் வீடில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், தற்போது அவர் டுவிட்டர் கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

இதில், அவர் திரைப்படங்கள் குறித்த பதிவுகளை அறிவிப்புகளை வெளியிடுவார் என தெரிகிறது. இதனால் அவரது ரசிகர்கள்  அவருடன் கலந்துரையாக கிடைத்த வாய்ப்பாக நினைத்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், சைக்கோ படத்தை அடுத்து அவர் அருண் விஜய் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும்,  இதையத்து தனது தம்பி இயக்கவுள்ள பிதா என்ற படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.