1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 20 அக்டோபர் 2021 (17:18 IST)

ஷங்கர் மருமகன் மீது காவல்துறை வழக்குப்பதிவு: சிறுமிக்கு பாலியல் தொல்லையா?

பிரபல இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரன் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஷங்கரின் மருமகன் ரோஹித் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட ஐவர் மீது புதுச்சேரி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். ரோஹித் தாமோதரன் உள்பட ஐவர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததை அடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஷங்கரின் மருமகன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது